Header Ads

Header ADS

தாடி வைத்தால் விவாகரத்து; பயத்தில் ரிக்கி பாண்டிங்


ரிக்கி பாண்டிங்

மும்பை, ஏப்.12-

‛‛தாடி வைத்தால் எனது மனைவி விவாகரத்து செய்து விடுவார்’’ என டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என பெயர் வாங்கியவர் ரிக்கி பாண்டிங். சமயோஜித புத்தியால் அணியை வழிநடத்தி வெற்றியை தன்வசப்படுத்தி கொள்வதில் கைத்தேர்ந்தவர். ஐ.பி.எல்.லில் மும்பை அணிக்காக விளையாடியவர், கேப்டன், தலைமை பயிற்சியாளர் பொறுப்புகளையும் வகித்தார்.

2018 முதல் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் டெல்லி அணி மிகப்பெரிய மாற்றத்தை அடைந்து வருகிறது. கடந்த சீசனில் டெல்லி பைனல் வரை முன்னேறியது. இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. 

தாடி வைத்தால் விவாகரத்து

இந்நிலையில் ரிக்கி பாண்டிங் பேசும் வீடியோ ஒன்றை டெல்லி அணி வெளியிட்டுள்ளது. அதில் பெரும்பாலும் ‛க்ளீன்ேஷவ்’ செய்து இருப்பதற்கான காரணம் என்ன குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சிரித்தபடி ரிக்கி பாண்டிங் பதிலளித்தார்.

மனைவி ரியானா ஜெனிபருடன், ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங் கூறுகையில், ‛‛நான் பயிற்சியாளராக இருந்தாலும் கூட எந்தவொரு ஆட்டத்தின்போதும் தாடி வைத்திருக்க மாட்டேன். ஏனென்றால் நான் தாடி வைத்தால் எனது மனைவிக்கு பிடிக்காது. ஒருவேளை டிவியில் தாடியுடன் என்னை அவர் பார்த்தால் முறைப்படி விவாகரத்து செய்து விடுவார். நீங்கள் கவனித்து உள்ளீர்களா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஒவ்வொரு ஆட்டத்துக்கு முந்தைய நாள் இரவிலும் தாடியை ேஷவ் செய்வதை ஒரு சடங்காக மேற்கொண்டு வருகிறேன் ’’ எனக்கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.