Header Ads

Header ADS

நடிகை ராஷ்மிகாவின் கிரிக்கெட் ஹீரோ யார் தெரியுமா


பெங்களூரு, மே.18-

இந்திய திரைப்பட ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தனது மனம் கவர்ந்த கிரிக்கெட் வீரர் யார் என்பது குறித்து பதிலளித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

கன்னடம் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் வெளியான ‛கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் இந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய இவர் நடிகர் கார்த்தி நடித்த ‛சுல்தான்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

‛சுல்தான்’ படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ரசிகரின் கேள்வி

ராஷ்மிகா, சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். இவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அடிக்கடி ரசிகர்கள் கேள்விக்கு சமூக வலைத்தளங்களில் பதிலளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ‛உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்’ என ராஷ்மிகாவிடம் கேள்வி எழுப்பினார்.

என் ஹீரோ டோனி

அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, ‛எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் சென்னை அணி கேப்டன் டோனி. அவரது பேட்டிங், கேப்டன்சி, விக்கெட் கீ்ப்பிங் அனைத்தும் பிடிக்கும்.

டோனி ஒரு மாஸ்டர் கிளாஸ் பிளேயர். கிரிக்கெட்டை பொறுத்தவரை என் ஹீரோ டோனி’ என பதிலளித்தார்.

‛இ சாலா கப் நம்தே’

ராஷ்மிகா மந்தனா, கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டையை சேர்ந்தவர். இதனால் அவர் ஐ.பி.எல். அணிகளை பொறுத்தமட்டில் விராட் கோலி தலைமையிலான ஆர்.சி.பி. அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் கூட அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‛‛இ சாலா கப் நம்தே’’ என ஆர்.சி.பி.க்கு ஆதரவாக பதிவிட்டு இருந்தார்.

இதனால் கிரிக்கெட்டில் பிடித்த வீரராக விராட் கோலியின் பெயரை ராஷ்மிகா கூறுவார் என நினைத்த நிலையில் மனம் கவர்ந்த வீரர் டோனி என அவர் தெரிவித்துள்ளார். இதை டோனி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

No comments

Powered by Blogger.